வாணியம்பாடி நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி.. அனைத்து வார்டும் சீல்.. கலெக்டர் அறிவிப்பு
திருப்பத்தூர்: வாணியம்பாடியை நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவி வரும் வேகம் முன்பை விட இப்போது குறைந்து வந்தாலும், இன்றைய நிலவரப்படி 1242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 22 மாவட்டங்களை கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டுகளாக (அதிகம் பரவக்கூடியவை) அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில் வேலூரில் இருந்து பிரிந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒருங்கிணைந்த (பழைய) வேலூர் மாவட்டத்தில் மட்டும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளில் ஒன்றாக வாணியம்பாடி உள்ளது. இதையடுத்து வாணியம்பாடியை நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டுள்ளார்..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகள் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
வாணியம்பாடி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படாது. வாணியம்பாடி நகரத்தில் உள்ள அனைத்து வார்டு வழித்தடங்களும் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க 82700 07135, குடிநீர் மற்றும் சுகாதார தேவைக்கு - 82700 07148, காவல்துறை - 82700 07149 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications