'எக்ஸ்ட்ரா டைம்' பேசிட்டார் ராமதாஸ்.. 5 'கணக்குப் பிள்ளைகள்' புகார்!
அரூர்: தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அரூர் சட்டசபைத் தொகுதிப் பகுதிகளில் பிரசாரம் செய்தபோது ஒதுக்கப்பட்ட நேரத்தை விட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக 5 கிராம நிர்வாக அதிகாரிகள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
தர்மபுரியில் போட்டியிடும் மகன் அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார் ராமதாஸ். கம்பைநல்லூர் பகுதியில் உள்ள இருமத்தூர், வகுரப்பம்பட்டி, சின்னமுருக்கம்பட்டி, கருவேலம்பட்டி, ஆல்ரப்பட்டி மற்றும் கொன்றம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அவருக்கு, பிரச்சாரம் செய்ய அப்பகுதியில் மாலை, 4.30 மணி முதல், 6 மணி வரை, தேர்தல் அதிகாரிகள் நேரத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால், அவர் நேரத்தை மீறி மாலை, 5.45 மணிக்கு பிரச்சாரத்தை துவக்கி, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பிரச்சாரம் செய்ததாக, இருமத்தூர் வி.ஏ.ஓ., கனகராஜ், வகுரப்பம்பட்டி, சின்னமுருக்கம்பட்டி, கருவேலம்பட்டி உள்ளிட்ட, ஐந்து வி.ஏ.ஓ.,க்கள் கம்பைநல்லூர் போலீஸில் புகார் செய்தனர்.
இன்னும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications