சென்னையை மிரள வைக்கும் வர்தா: நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை
சென்னை: வர்தா புயலால் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்வதுடன் பலத்த காற்று வீசி வருகிறது.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் பழவேற்காடு- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசுகிறது. மேலும் மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் பலத்த காற்று வீசும் இடங்களில் வசிப்போர் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது இது தான்.

வேண்டாம்
மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். முக்கியமாக குழந்தைகள், வயதானவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

கடல்
கடல்கரையோரம் வசிப்போர் இடத்தை காலி செய்துவிட்டு வேறு எங்காவது சென்று தங்கலாம். வீட்டில் இருந்தாலும் கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்து வேடிக்கை பார்க்க வேண்டாம்.

மின்சாரம்
பலத்த காற்று வீசுவதால் மின் வயர்கள், போன் வயர்கள் அறுந்து விழக்கூடும். அதனால் மக்கள் தங்களின் செல்போன்களை சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளவும்.

வாகனங்கள்
நீங்கள் என்ன தான் விலை உயர்ந்த கார்கள், பைக்குகள் வைத்திருந்தாலும் அதில் வெளியே செல்ல வேண்டாம். நீங்கள் பறந்து செல்லும் வாய்ப்பு அதிகம்.

ரேடியோ
பேட்டரி ரேடியோவை கையில் வைத்திருப்பது நல்லது. ரேடியோ மூலம் புயல் குறித்த தகவல்கள், உதவி எண்கள் உள்ளிட்ட விபரங்களை பெறலாம்.












Click it and Unblock the Notifications