வர்தா புயல்: காற்றின் வேகம் தாங்காமல் தடுமாறி விழுந்து 36 பேர் காயம்
சென்னையில் பலத்த புயல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைந்துள்ளனர். புயல் காற்று காரணமாக வாகன ஓட்டிகள் 36 பேர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் தற்போது சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. பிற்பகலில் பழவேற்காடு கும்மிடிப்பூண்டி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இரவு முதல் காலை வரை சென்னையில் 7.5 செமீ மழை பதிவாகியுள்ளது.

முறிந்த விழுந்த மரம்
காற்று பலமாக வீசுவதால் பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. காற்றின் வேகம் தாங்காமல் மரம் முறிந்து வீட்டில் மேல் விழுகிறது. அந்த வீட்டில் இருந்தவர்களின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.
அரும்பாக்கம் அருகில் 😷😷😷#வர்தாபுயல் pic.twitter.com/2gueyRF492
— ❤கௌ❤ (@imgowraina) December 12, 2016
36 பேர் காயம்
புயல் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் பலர் வீட்டை விட்டு வெளியேறி இருசக்கர வாகனங்களில் பயணித்தனர். காற்றின் வேகம் தாங்காமல் பலரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதுவரை 36 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications