பேய்காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன... இருளில் மூழ்கிய சென்னை#vardah
Subscribe to Oneindia Tamil
சென்னை: வர்தா புயலால் காற்று சுழற்றியடிப்பதால் சென்னையில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியது. புயலின் மையப் பகுதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் கரையை கடக்கும். இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்து வருவதுடன் காற்று சுழற்றியடித்து வருகிறது.

புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்றால் சென்னையின் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பகல் கூட இரவு நேரம் போன்று காட்சியளிக்கிறது.
இந்நிலையில் மின்வினியோகமும் இல்லாததால் சென்னை இருளில் மூழ்கியுள்ளது.












Click it and Unblock the Notifications