வங்கக் கடலில் வலுவடைந்தது வர்தா புயல்.. ஆந்திராவுக்கு கனமழை எச்சரிக்கை
வார்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என்றும், ஆந்திராவில் நெல்லூர் - மசூதிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: வார்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என்றும், ஆந்திராவில் நெல்லூர் - மசூதிப்பட்டினம் இடையே அது கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை கன மழை பெய்யாததால் ஏரி, குளங்கள், அணைகள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே உள்ளன.

அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால்தான் வட தமிழகத்திற்கு மழை கிடைக்கும். ஆனால் இது வரை அப்படி மழை பெய்யவில்லை. மாறாக பனி பெய்யத் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் வங்க கடலில் உருவான 'வார்தா புயல்' மெதுவாக ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வார்தா புயல் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் இரவு 11.30 மணியளவில் தீவிர புயலாக மாறி உள்ளது. மேலும், அது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
வருகிற 12-ந் தேதி மாலை ஆந்திராவில் நெல்லூர் - மசூதிப்பட்டினம் இடையே வர்தா புயல் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது புயல் வலுவிழக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், அங்கு மழை அதிகம் பெய்யும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனத் தெரிவித்தனர்.
எனவே, மீனவர்கள் யாரும் ஆந்திரா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்யுக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications