வங்கக் கடலில் வலுவடைந்தது வர்தா புயல்.. ஆந்திராவுக்கு கனமழை எச்சரிக்கை
வார்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என்றும், ஆந்திராவில் நெல்லூர் - மசூதிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: வார்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என்றும், ஆந்திராவில் நெல்லூர் - மசூதிப்பட்டினம் இடையே அது கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை கன மழை பெய்யாததால் ஏரி, குளங்கள், அணைகள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே உள்ளன.

அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால்தான் வட தமிழகத்திற்கு மழை கிடைக்கும். ஆனால் இது வரை அப்படி மழை பெய்யவில்லை. மாறாக பனி பெய்யத் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் வங்க கடலில் உருவான 'வார்தா புயல்' மெதுவாக ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வார்தா புயல் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் இரவு 11.30 மணியளவில் தீவிர புயலாக மாறி உள்ளது. மேலும், அது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
வருகிற 12-ந் தேதி மாலை ஆந்திராவில் நெல்லூர் - மசூதிப்பட்டினம் இடையே வர்தா புயல் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது புயல் வலுவிழக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், அங்கு மழை அதிகம் பெய்யும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனத் தெரிவித்தனர்.
எனவே, மீனவர்கள் யாரும் ஆந்திரா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்யுக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications