வெடிகுண்டு வழக்கு: வரிச்சியூர் செல்வத்தின் தம்பி, கூட்டாளி சுப்பிரமணி மேலூர் கோர்ட்டில் சரண்
மதுரை: மதுரையில் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது தொடர்பாக ஏற்கனவே ஏற்கனவே பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 3 பேர் சரணடைந்துள்ள நிலையில் தற்போது செல்வத்தின் தம்பி செந்தில் உள்பட மேலும் 2 பேர் மதுரை மேலூர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட சிலரைப் போலீஸார் தேடி வந்தனர்.
இதையடுத்து செல்வமும், அவரது நண்பர் கீரி மணி, டிரைவர் பார்த்திபன் ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர். இதில் செல்வம், பார்த்திபன் ஆகியோர் மதுரை கோர்ட்டிலும், மணி விழுப்புரம் கோர்ட்டிலும் சரணடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் இருவர் மதுரை மேலூர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். அவர்கள் செல்வத்தின் தம்பி செந்தில் மற்றும் கூட்டாளி சுப்பிரமணி ஆகியோர் ஆவர்.
இதற்கிடையே வரிச்சியூர் செல்வத்தை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை 6வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் மனு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications