தமிழர்களின் கடைசிக் கோவணத்தையும் உருவி விட்டது மத்திய அரசு.. ஆளூர் ஷாநவாஸ் காட்டம்
மறைமுகமாக முதலில் விவசாயத்தையும், பின்னர் ஜல்லிக்கட்டையும் தடை செய்த மத்திய அரசு தற்போது பொங்கல் விடுமுறையையும் ரத்து செய்து தமிழர்களின் கடைசிக் கோவணத்தையும் உருவி விட்டதாக ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்
சென்னை: பொங்கலுக்கு பொது விடுமுறை என்பதை ரத்து செய்து தமிழர்களின் கடைசிக் கோவணத்தையும் உருவி விட்டது மத்திய அரசு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் சாடியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை கட்டாய பொது விடுமுறைகள் பட்டியலிலிருந்து இன்று நீக்க விட்டது மத்திய பாஜக அரசு. தமிழர்களை நேரடியாக இது தாக்கும் செயலாக அனைவரும் பார்க்கின்றனர். இந்த செயலுக்கு ஆளுர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:
பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். பயிரிட்டால் தானே அறுவடை செய்ய முடியும். காவிரியில் நம்மை வஞ்சித்து, பயிரிட முடியாமல் செய்து விட்டனர். பொங்கலை முன்னிட்டு நடைபெறும் ஏறு தழுவுதல் விளையாட்டு தமிழரின் பண்பாட்டு அடையாளம். அதற்கும் தடை விதித்து விட்டனர். பொங்கல் விடுமுறை மட்டுமே எஞ்சியிருந்தது. அந்தக் கோவணத்தையும் இப்போது உருவி விட்டனர். தமிழர் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications