20 தமிழர் படுகொலை- ஆந்திரா அரசை கலைக்க வலியுறுத்தி போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது
சென்னை: 20 தமிழரைப் படுகொலை செய்த ஆந்திரா மாநில அரசை கலைக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி அருகே 20 தமிழக அப்பாவி கூலித் தொழிலாளர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளது ஆந்திரா காவல்துறை. இந்த படுகொலையை ஆந்திரா அரசும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த கொலைபாதகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 3வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. சென்னையில் இன்று ஆந்திரா அரசை கலைக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போராட்டம் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாப்பூரில் தாக்குதல்
மேலும் சென்னை மயிலாப்பூரில் ஹெரிட்டேஜ் பிரஷ் என்ற சூப்பர் மார்க்கெட் கடை மீது தமிழர் எழுச்சி இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். அந்த கடையின் கண்ணாடிகள் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டன.