விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் கேட்டு நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தாங்கள் கேட்டபடி இரண்டு தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் எனக் கேட்டு அக்கட்சி நிர்வாகி ஒருவன் அண்ணா அறிவாலய வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
16வது லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டுவிட்டன. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களாம் சூடுபிடித்துள்ளது.
தமிழக கட்சிகள் தேர்தல் வேலைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தி.மு.க. தலைமையிலான ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணி'யில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையின் பலனாக அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் ‘மதவாத சக்திகளுக்கு வாக்குகள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, வருத்தம் இருந்தாலும் தி.மு.க. கூட்டணியை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
அப்போது எதிர்பாரா விதமாக அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் ‘‘விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்'' என்று கூறியவாறு, திடீரென்று தன்னிடம் உள்ள பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டார். ‘‘விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்காவிட்டால் தீக்குளிப்பேன், தீக்குளிப்பேன்'' என்று மிரட்டல் விடுத்தார்.
அந்த நபரை அங்கிருந்த சிலர் தாக்க முயன்றனர். இதைப்பார்த்த தொல்.திருமாவளவன் உடனே ஓடிச்சென்று அந்த நபரை மீட்டார். பின்னர் தனது காரிலேயே ஏற்றி அழைத்துச்சென்றார். தீக்குளிக்க முயன்ற அந்த நபர் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி என்பது தெரியவந்தது.
-
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
மகளிர் உரிமைத் தொகை.. திட்டத்தை அறிவித்த திருச்சியில் நின்று மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE












Click it and Unblock the Notifications