ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் கையெழுத்தானது.. தமிழகத்தில் 2 இடத்தில் வேதாந்தா.. ஒன்றில் ஓஎன்ஜிசி
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம்.
சென்னை: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் மீண்டும் உயிர்பெற்று இருக்கிறது. நெடுவாசலில் இருந்து அகற்றப்பட்ட இந்த திட்டம் இப்போது வேறு மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதில் வேதாந்தா நிறுவனம்தான் அதிக இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தம் எத்தனை இடங்கள்
இந்தியா முழுக்க மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம்தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. மீதமுள்ள இடங்களில் 4 நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறது. இதில் தமிழகத்தில் மொத்தம் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கபட உள்ளது.

இரண்டாக பிரித்து
தமிழகத்தில் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் வேதாந்த நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும். ஒரு இடத்தில் ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் எடுக்கும். இதற்கான ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கும்.

நாகை
இந்த முறை நாகை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட இருக்கிறது. இரண்டு இடங்களில் நாகையில் எடுக்கப்பட உள்ளது. இன்னொரு இடம் இன்னும் முடிவாகவில்லை. நாகையில் எங்கு எடுக்கப்பட உள்ளது என்று அறிவிப்பு வெளியாகவில்லை.

எவ்வளவு ஒப்பந்தம்
மத்திய அரசிடம் இதற்காக மொத்தமாக 3934 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது வேதாந்தா நிறுவனம். பாஜகவை சேர்ந்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.












Click it and Unblock the Notifications