கோத்தகிரியில் இன்று 2-வது நாள் காய்கறி கண்காட்சி: பார்வையாளர்கள் பரவசம்!
2-வது நாள் காய்கறி கண்காட்சியினை ஏராளமானோர் கண்டுகளிக்கின்றனர்.
Recommended Video

கோத்தகிரி: கோத்தகிரியில் நடைபெற்றுவரும் இரண்டாவது நாள் காய்கறி கண்காட்சி மற்றும் கோடைவிழாவில் இன்று ஏராளமானோர் பங்கேற்று கண்டுகளித்து வருகின்றனர்.
கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கடந்த 2008-ம் ஆண்டு முதல் நீலகிரி தோட்டக்கலை துறையால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 10-வது காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சுற்றுலா துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும். மத்திய மாநில அரசுகளிடம் நிதி பெற்று சுற்றுலா ஸ்தலங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் உதகையின் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் வரைவில் கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

காய்கறி கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறை மற்றும் காய்கறி உற்பத்தி தொடர்பான விளக்க அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காய்கறி மற்றும் பழங்களை கொண்டு மெகா நந்தி அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர காய்கறிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் முதன் முறையாக இதில் காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டன.

இன்றைய 2-வது நாள் காய்கறி கண்காட்சியை ஏராளமானோர் கண்டு களித்து செல்வதுடன், காய்கறி அரங்கங்கள் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக எடுத்து மகிழ்கின்றனர். இந்த காய்கறி கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசும் சுழற்கோப்பையும் வழங்கப்படவுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications