நெல்லையில் காய்கறி வியாபாரி மர்மகாய்ச்சலுக்கு பலி: டெங்கு என அச்சம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்குவுக்கு இரண்டு சிறுவர்கள் பலியான நிலையில் காய்கறி வியாபாரி ஒருவரும் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் சப்பாணிலெப்பை தெருவை சேர்ந்தவர் நாசர். அவர் மேலப்பாளையத்தில் காய்கறி கடை நடத்தி வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவருக்கு கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை. இந்த நிலையில் அவர் திடீரென நேற்று மாலை மரணம் அடைந்தார்.
இது குறித்து அவரது சகோதரர் கூறுகையில்,
எனது சகோதரருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் அவரை கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்தத்தில் பிளேட்லெட் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். எனவே அவருக்கு டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். ரத்தமும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஊசி போடப்பட்டு வந்ததால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. ஆனால் நேற்று காலை முதல் அவருக்கு மீண்டும் காய்ச்சல் அதிகரித்தது.
இந்நிலையில் அவர் மாலை இறந்து போனார். அவர் டெங்கு காய்ச்சலால் இறந்திருக்கலாம் என அச்சப்படுகிறோம் என்றார்.
இதனால் மேலப்பாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுமோ என்ற பயத்தில் பொதுமக்கள் உள்ளனர். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் முக்கூடல் தாளாளர்குளத்தில் டெங்குவுக்கு இரண்டு சிறுவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications