இரட்டை ரயில் பாதை பணி.. குமரி செல்லும் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக குமரி மாவட்டம் வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை பணிமனை மற்றும் வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்பட்டு மாற்று நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. எனவே பயணிகள் தங்களது பயண விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை - நாகர்கோவில் ரயில்கள்
நெல்லை பணிமனை மற்றும் வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவையில் இருந்து வருகிற 20-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16322) மற்றும் நாகர்கோவிலில் இருந்து வருகிற 30-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16321) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
ராமேசுவரம் - கன்னியாகுமரி ரயில்கள் ரத்து
ராமேசுவரத்தில் இருந்து வருகிற 27 மற்றும் 29-ந்தேதிகளில் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22621) மற்றும் மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து வருகிற 28 மற்றும் 30-ந்தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22622) ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன.
நாகர்கோவிலில் இருந்து வருகிற 14 மற்றும் 21-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16321), நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்.
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்
நாகர்கோவிலில் இருந்து வருகிற 21 முதல் 23 மற்றும் 25 முதல் 30 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (20692), நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
அதேபோல், நாகர்கோவிலில் இருந்து வருகிற 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22667), நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் இருந்து அதிகாலை 2.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்.
புதுச்சேரி - தாம்பரம் ரயில்கள்
கன்னியாகுமரியில் இருந்து வருகிற 29-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16862), கன்னியாகுமரி - மானாமதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, மானாமதுரையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும்.
மேலும், கன்னியாகுமரியில் இருந்து வருகிற 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22658), கன்னியாகுமரி - விருதுநகர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, விருதுநகரில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
தாம்பரத்தில் இருந்து வருகிற 20 முதல் 22 மற்றும் 24 முதல் 29 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (20691), திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பல ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?














Click it and Unblock the Notifications