அண்டை மாநில மழையால் விளைச்சல் பாதிப்பு.. வரத்து குறைந்ததால் கோயம்பேட்டில் காய்கறி விலை கிடுகிடு!
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை காரணமாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விலையிலேயே காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் மொத்த விலையிலேயே இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்கு காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அதிக அளவிலான காய்கறிகள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு வழக்கத்தை விட குறைவான அளவே காய்கறிகளின் வரத்து இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதற்கும் ஏகப்பட்ட கிராக்கி இருப்பதால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாகக் கூறுகின்றனர்.

வரத்து குறைந்தது
மொத்த விலையிலேயே காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ. 40க்கு விற்கப்பட்ட ஒருகிலோ கேரட் இன்றைய சந்தை விலையில் ரூ. 80க்கு விற்கப்படுகிறது. இதே போன்று பீட்ரூட் ரூ. 30ல் இருந்து ரூ. 60 ஆகவும்,முட்டைகோஸ் ரூ. 20ல் இருந்து ரூ. 40 ஆகவும் அதிகரித்துள்ளது.

ரூ. 50 வரை உயர்வு
அவரைக்காய் ஒரு கிலோவிற்கு ரூ. 30 அதிகரித்து ரூ. 80க்கு விற்கப்படுகிறது. பீன்ஸ் கிலோவிற்கு ரூ. 40 அதிகரித்து ரூ. 100க்கும், முருங்கைக்காய் கிலோவிற்கு ரூ. 50 அதிகரித்து ரூ. 150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம் விலை மீண்டும் உச்சம்
சின்ன வெங்காயத்தின் விலையம் ரூ. 120ஐ மீண்டும் தொட்டுவிட்டது. பல்லாரி என்று சொல்லப்படும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 40க்கு விற்கப்படுகிறது. தக்காளியின் விலையும் அரை சதத்தை தொட்டுவிட்டது.

சில்லரை விலைக்கடையின் ஜாஸ்தி
கத்திரிக்காய் விலை ரூ.10 அதிகரித்து ரூ. 45க்கும், வெண்டைக்காய் விலை ரூ. 15 அதிகரித்து ரூ. 45க்கும் விற்பனையாகிறது. மொத்த விலையிலேயே இருமடங்கு விலை உயர்வு என்றால் சில்லரை விலைக் கடையில் வாங்கும் போது இது இன்னும் அதிகரிக்கிறது என்று இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விலை இப்போதைக்கு குறையாது
எனினும் இப்போது தான் காய்கறிகள் விதைக்கப்பட்டுள்ளன என்பதால் அவை அறுவடைக்கு வர ஒரு மாத காலமாகிவிடும். எனவே ஒரு மாத காலத்திற்கு காய்கறிகளின் விலை இப்படியேத் தான் இருக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications