அண்டை மாநில மழையால் விளைச்சல் பாதிப்பு.. வரத்து குறைந்ததால் கோயம்பேட்டில் காய்கறி விலை கிடுகிடு!
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை காரணமாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விலையிலேயே காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் மொத்த விலையிலேயே இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்கு காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அதிக அளவிலான காய்கறிகள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு வழக்கத்தை விட குறைவான அளவே காய்கறிகளின் வரத்து இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதற்கும் ஏகப்பட்ட கிராக்கி இருப்பதால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாகக் கூறுகின்றனர்.

வரத்து குறைந்தது
மொத்த விலையிலேயே காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ. 40க்கு விற்கப்பட்ட ஒருகிலோ கேரட் இன்றைய சந்தை விலையில் ரூ. 80க்கு விற்கப்படுகிறது. இதே போன்று பீட்ரூட் ரூ. 30ல் இருந்து ரூ. 60 ஆகவும்,முட்டைகோஸ் ரூ. 20ல் இருந்து ரூ. 40 ஆகவும் அதிகரித்துள்ளது.

ரூ. 50 வரை உயர்வு
அவரைக்காய் ஒரு கிலோவிற்கு ரூ. 30 அதிகரித்து ரூ. 80க்கு விற்கப்படுகிறது. பீன்ஸ் கிலோவிற்கு ரூ. 40 அதிகரித்து ரூ. 100க்கும், முருங்கைக்காய் கிலோவிற்கு ரூ. 50 அதிகரித்து ரூ. 150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம் விலை மீண்டும் உச்சம்
சின்ன வெங்காயத்தின் விலையம் ரூ. 120ஐ மீண்டும் தொட்டுவிட்டது. பல்லாரி என்று சொல்லப்படும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 40க்கு விற்கப்படுகிறது. தக்காளியின் விலையும் அரை சதத்தை தொட்டுவிட்டது.

சில்லரை விலைக்கடையின் ஜாஸ்தி
கத்திரிக்காய் விலை ரூ.10 அதிகரித்து ரூ. 45க்கும், வெண்டைக்காய் விலை ரூ. 15 அதிகரித்து ரூ. 45க்கும் விற்பனையாகிறது. மொத்த விலையிலேயே இருமடங்கு விலை உயர்வு என்றால் சில்லரை விலைக் கடையில் வாங்கும் போது இது இன்னும் அதிகரிக்கிறது என்று இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விலை இப்போதைக்கு குறையாது
எனினும் இப்போது தான் காய்கறிகள் விதைக்கப்பட்டுள்ளன என்பதால் அவை அறுவடைக்கு வர ஒரு மாத காலமாகிவிடும். எனவே ஒரு மாத காலத்திற்கு காய்கறிகளின் விலை இப்படியேத் தான் இருக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications