மெய்சிலிர்க்குதே.. வேளாங்கண்ணி மாதா பேராலய கொடியேற்றம் இன்று துவங்குகிறது.. விழாக்கோலத்தில் நாகை
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வேளாங்கண்ணியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
வருடா வருடம் இந்த பேராலயத்தில் பெருவிழா நடப்பது வழக்கம்.. அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் 29 -ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாள்கள் விழா நடைபெறும்...

இந்த நாள்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல நூறு கி.மீ. தூரம் நடைபயணமாகவே அன்னையின் அருளாசியை பெற திரண்டு வருவார்கள்.. ஆனால், கடந்த 2 வருடமாகவே, கொரோனா காரணத்தினால், பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த்து.
பக்தர்கள்: இந்த வருடம் எந்த தடையும் இல்லாத சூழலில், பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் திரண்டு வந்துள்ளனர்.. இன்று மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.
பிறகு, கொடி ஊர்வலம் நடைபெற்று கொடியேற்றம் நடைபெறும்... இதையடுத்து, திருத்தலக் கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் போன்றவை தொடர்ந்து நடைபெறும்.
வரும் 30 -ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 7-ம் தேதிவரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், பேராலயத்தின் மேல்கோயில், பேராலயத்தின் கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் இரவு பகலாக வழிபாடுகள் நடைபெறும்... வரும் 2 -ம் தேதி மாலை சிலுவைபாதை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
தேர்பவனி: 7 -ம் தேதி திருத்தல கலையரங்கத்தில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடக்கும்.. 8 -ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு, திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படும். அன்றிரவு 8 மணிக்குப் பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.
இந்த விழாக்களையொட்டி, பேராலயம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, அலங்கார மின் விளக்குகளால் ஜோடிக்கப்பட்டுள்ளது.. எப்படியும் இந்த பெருவிழாவிற்கு சுமார் 20 லட்சம் பக்தர் வருவார்கள் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதால், அடிப்படை வசதிகளை பேராலய நிர்வாகம் மற்றும் வேளாங்கண்ணிப் பேரூராட்சி, காவல்துறையினர் இணைந்து செய்திருந்தனர்.
கண்காணிப்பு கோபுரம்: பக்தர்களுக்கு சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்காலிகக் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சில ரெயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
27 உயர் கண்காணிப்பு கோபுரம், 4 ஆளில்லா விமானம் ( Drone Camera) 760 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகையால், வேளாங்கண்ணியில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள், பஸ் ஸ்டாண்டு, ஓட்டல்கள், கடைவீதி ஆகிய இடங்களில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications