வேலூர் அருகே கள்ளச்சாராயத்திற்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் அருகே கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் பலியானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசே மதுக் கடைகளை நடத்தி வருகிறது. கிராமங்கள், நகரங்கள் என்று எங்கு பார்த்தாலும் மதுக் கடைகள்தான்.
மக்கள் குடியிருக்கும் இடங்கள், கோவில்கள், பள்ளிக் கூடங்கள் அருகே என்று எந்த இடத்தையும் விடாமல் டாஸ்மாக் கடைகள் நீக்கமற நிறைந்துள்ளன. இதனால் தமிழகத்தில் பலரும் குடிக்கு அடிமையாகும் அவலம் காணப்படுகிறது.
இப்படிக் கடைகள் பல இருந்தும் கூட கள்ளச்சாராயம் குடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வேலூர் மாவட்டம் ஐயன்கண்டிகை என்ற கிராமத்தைச் சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில், பாபு, ரமேஷ் ஆகியோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
கள்ளச்சாராயத்திற்கு 2 பேர் பலியான சம்பவத்தால் ஐயன்கண்டிகை கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications