சென்னையில் ஐபிஎல் போட்டிகள் கூடாது: மீறினால் மைதானத்துக்குள் நுழைந்து போராட்டம்: வேல்முருகன்
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்றும் மீறினால் போராட்ட வடிவம் பெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்றும் அவ்வாறு மீறினால் மைதானத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகத்தின் எதிர்ப்பை காட்ட, சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று காணாதீர்கள் என்று வேல்முருகன் நேற்றைய தினம் வலியுறுத்தியிருந்தார். அதுபோல் ஜேம்ஸ் வசந்தனும் போட்டிகளை நேரில் காணாமல் மைதானம் காலியாக இருந்தால் அதற்கான காரணம் உலக அளவில் சென்றடையும் என்பதால் ஐபிஎல்லை நேரில் காண்பதை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் அது காவிரி பிரச்சினையை திசை திருப்பிவிடும்.
எனவே ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்ட வடிவம் மாறும். ஐபிஎல் போட்டி மைதானத்துக்குள் நுழைந்து போராட்டத்தை தொடருவோம் என்றார் வேல்முருகன்.












Click it and Unblock the Notifications