வேந்தர் மூவிஸ் மதனின் போலீஸ் காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு
கைது செய்யப்பட்டுள்ள வேந்தர் மூவிஸ் மதனின் போலீஸ் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை 11வது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: வேந்தர் மூவிஸ் மதனின் போலீஸ் காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். மேலும் மதனின் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலைக் கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக ரூ.80 கோடி வசூலித்து மோசடி செய்து தலைமறைவானார் மதன். இதனைத் தொடர்ந்து அவரது தாயார் தங்கம் ஆட்கொணர்வு வழக்கும் தொடர்ந்தார். மேலும், மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கி தருவது தொடர்பாகவும் வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடப்பட்டிருந்தன. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான மதனை தேடிவந்தனர்.

இந்த நிலையில் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை சென்னை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியிருந்தார். அதன்படி, மதனின் போலீஸ் காவல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.
இதையடுத்து சைதாப்பேட்டை 11வது நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்பு மதன் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மதனின் போலீஸ் காவலை மேலும் 2 நாள் நீட்டித்து நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் மதனின் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications