ஜெயலலிதா உடல் நலம் பெற மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று பணிகளை தொடர வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ராஜாஜி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், மகாத்மா காந்தி வரலாற்று புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடு, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று பணிகளை தொடர வேண்டும் என வாழ்த்தினார். மேலும், 1916-ம் ஆண்டு பனாரசில் மகாத்மா காந்தி தூய்மை குறித்து உரையாற்றினார் என்றும், எனவே, அவர் பிறந்த நாளில் அனைவரும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications