Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த வெங்கைய்யா நாயுடு!

மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் தமிழக அரசு கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு எச்சரித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களுக்கு இலவசங்களை மட்டும் கொடுத்துவிட்டு தமிழக விவசாயிகளின் பிரச்சனையை மட்டும் தீர்க்காமல் இருப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் வெங்கய்யா நாயுடு எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து வெங்கய்ய நாயுடு கூறுகையில், விவசாயிகள் பிரச்சனையை மாநில அரசு தான் முழுமையாக தீர்க்க வேண்டும். மத்திய அரசு உதவிக்கரம் மட்டுமே நீட்டும். பிரச்சினைகளை மாநில அரசுதான் தீர்க்க முயல வேண்டும். விவசாயிகள் கடன்களை மாநில அரசு தான் தள்ளுபடி செய்ய வேண்டும்.

Venkaiah Naidu warns TN govt

போதிய நிதி இருந்தால் மாநில அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யலாம். உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே தேசம் வளரும். மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சிக்கல் ஏற்படும்.

பல்வேறு இலவசங்களை வழங்கும் தமிழக அரசு விவசாயிகள் பிரச்சனையை தீர்க்காதது ஏன்?. தமிழகத்தில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்தவித தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+