கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த வெங்கைய்யா நாயுடு!
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் தமிழக அரசு கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு எச்சரித்துள்ளார்.
சென்னை: மக்களுக்கு இலவசங்களை மட்டும் கொடுத்துவிட்டு தமிழக விவசாயிகளின் பிரச்சனையை மட்டும் தீர்க்காமல் இருப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் வெங்கய்யா நாயுடு எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வெங்கய்ய நாயுடு கூறுகையில், விவசாயிகள் பிரச்சனையை மாநில அரசு தான் முழுமையாக தீர்க்க வேண்டும். மத்திய அரசு உதவிக்கரம் மட்டுமே நீட்டும். பிரச்சினைகளை மாநில அரசுதான் தீர்க்க முயல வேண்டும். விவசாயிகள் கடன்களை மாநில அரசு தான் தள்ளுபடி செய்ய வேண்டும்.

போதிய நிதி இருந்தால் மாநில அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யலாம். உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே தேசம் வளரும். மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சிக்கல் ஏற்படும்.
பல்வேறு இலவசங்களை வழங்கும் தமிழக அரசு விவசாயிகள் பிரச்சனையை தீர்க்காதது ஏன்?. தமிழகத்தில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்தவித தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications