வெங்கடேச பண்ணையார் நினைவு தினம்.. தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் குவிப்பு.. 144 தடையுத்தரவு
தூத்துக்குடி: வெங்கடேஷ் பண்ணையாரின் 14வது நினைவு நாளை முன்னிட்டு, செப்டம்பர் 25ம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 27ம் தேதிவரை வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி, ஜெயலலிதா ஆட்சியின்போது, வெங்கடேச பண்ணையார் போலீசாரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டு, வரும் 26ம் தேதி 14வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

வெங்கடேச பண்ணையாரின் சமாதி திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரம் கிராமத்தில் உள்ளது. 26ம் தேதி, பண்ணையாரின் நினைவு தினம் வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேச பண்ணையார் என்பதால், தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான மக்கள் நினைவு தினத்தில் கலந்து கொள்வார்கள். மேலும், மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து குவிவார்கள் என்பதால் மாவட்டம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றன. கொலையான பசுபதி பாண்டியன் ஆதரவாளர் சிங்காரத்தை நெல்லையில் போலீஸ் ஜீப்பில் வைத்தே வெட்டி கொலை செய்த வழக்கில் வெங்கடேஷ் பண்ணையாரின் பங்காளி சுபாஷ் பண்ணையாரை தேடப்படும் குற்றவாளியாக நெல்லை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே அவர் வெங்கடேச பண்ணையார் நினைவு தினத்திற்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பில் போலீசார் அவரை கைது செய்ய கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டம் பரபரப்பில் உள்ளது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications