மதுரை அருகே நூறாண்டுகளைக் கடந்த தேவாலயம் மழையால் இடிந்து தரைமட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே நூற்றாண்டுகளைக் கடந்த தேவாலயம் இடிந்து தரைமட்டமானதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மதுரையை அடுத்த சாத்தன்குடியில் 160 ஆண்டுகளைக் கடந்த தேவாலயம் இருந்தது. இந்த தேவாலயத்தில் கிருஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் பண்டிகை நாட்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வந்தனர்.

சாத்தன்குடியில் வாழும் கிருஸ்துவர்கள் இந்த தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மதுரையில் நல்ல மழை பெய்து வந்தது.
பலத்த மழையில் பலமிழந்த இந்த தேவாலயம் இடிந்து தரைமட்டமானது. அதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட அங்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழமையான தேவாலயம் இடிந்து தரைமட்டமனதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications