ஆளுநர் அதிகாரத்துக்குட்பட்டே துணை வேந்தர் நியமனம்.. அரசுக்கு சம்பந்தமில்லை.. அமைச்சர் விளக்கம்
ஆளுநர் அதிகாரத்துக்குட்பட்டே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆளுநர் அதிகாரத்துக்குட்பட்டே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் சூரப்பா நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசுக்கு சம்பந்தமில்லை
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே துணை வேந்தரை நியமித்துள்ளார், இதில் அரசுக்கு சம்பந்தமில்லை என்றும் அரசு அதில் தலையிட முடியாது என்றும் கூறினார்.

காவிக்கு இடமில்லை
நாட்டிலேயே அறிவுசார் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றும் தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.தமிழகத்தில் கருப்பு,சிவப்பு, வெள்ளை நிறம்தான் ஆட்சி செய்யும் என்றும் காவிக்கு இங்கு இடமில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.

பிசிசிஐ முடிவு
தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், தமிழகத்தின் உணர்வை புரிந்து எதிர்ப்பால் ஐபிஎல் நடத்தலாமா வேண்டாமா என்பதை பிசிசிஐ தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அர்த்தம் தெரியாமல்
காவிரி விவகாரத்தில் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறோம் என்ற ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என 100% நம்பிக்கை உள்ளது என்றார். ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் மத்திய அரசு நீதிமன்றம் சென்றுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications