For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாக்! 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய 55 வயது நபர்.. அடித்தே கொன்ற உறவினர்கள்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

தென்காசி: வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த 55 வயது நபரைப் பெண் உள்பட 2 பேர் அடித்தே கொன்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

    ஷாக்! 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய 55 வயது நபர்.. அடித்தே கொன்ற உறவினர்கள்.. வைரல் வீடியோ

    தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால். 55 வயதாகும் கோபால் அப்பகுதியில் பெயிண்டராக உள்ளார்.

    இந்நிலையில், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே உள்ள வீட்டில் நேற்று கோபால் பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார்.

    கோவாக்சின் தடுப்பூசி 2 டோஸும் போட்டுவிட்டீர்களா? உங்களுக்காகவே வந்துள்ள அட்டகாசமான அறிவிப்புகோவாக்சின் தடுப்பூசி 2 டோஸும் போட்டுவிட்டீர்களா? உங்களுக்காகவே வந்துள்ள அட்டகாசமான அறிவிப்பு

    கல்லைப் போட்டு கொலை

    கல்லைப் போட்டு கொலை

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவரும், அவருடைய உறவுக்கார பெண்ணும் கோபாலை வெளியே வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே 2 பேரும் அங்குக் கிடந்த பெரிய கல்லை எடுத்து கோபால் தலையில் தூக்கிப் போட்டனர். பின்னர் கம்பால் சரமாரி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    உடனே அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீஸ் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபால் உடலை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    போலீசாரின் விசாரணையில் பல திடுக் தகவல்கள் தெரிய வந்தன. அதாவது கொலை செய்யப்பட்ட கோபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி தனியாக இருந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்ட கோபால், சிறுமியிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    2 பேர் கைது

    2 பேர் கைது

    இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கோபாலிடம் இது குறித்து விசாரிக்கவே நேற்று வந்துள்ளனர். அப்போது பேச்சுவார்த்தை முற்றியதில் அது கைகலப்பாக வன்முறையில் முடிந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    English summary
    tenkasi latest crime news. tenkasi latest viral video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X