கூழ்வார்க்கும் திருவிழாவில் கரணம் அடித்த ஆரணி கபடி வீரர்.. மயங்கி விழுந்து உயிரிழப்பு.. வீடியோ
ஆரணி: ஆரணியில் கோயில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் களத்துமேட்டுத் தெருவில் கடந்த 8ஆம் தேதி மாரியம்மன் கோயிலுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.
இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கபடி வீரர் வினோத்குமார் (34) என்பவர் கரணம் அடிக்கும் பயிற்சியை மேற்கொண்டார்.

அதிர்ச்சி
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வீடியோ வைரல்
வினோத்குமார் கரணம் அடிக்கும்போது மயங்கி விழும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வினோத் குமார் குட்டிக் கரணம் அடிக்கிறார். அடுத்து மீண்டும் தொடர் குட்டிக் கரணம் அடிக்கும் போது தலைக்குப்புற விழுந்து மயங்கிவிடுகிறார். உடனே பொதுமக்கள் ஓடி வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

என்ன காரணம்
பொதுவாக இது போன்ற சமயங்களில் ரத்தத்தின் அடர்த்தி அதிகமாக இருக்கும் என்றும் அதிக அழுத்தத்தால் ரத்தக் குழாய்கள் வெடித்திருக்கலாம் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறி வருகிறார்கள். எனினும் வினோத்தின் இறப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை.

கடலூரில் கபடி வீரர் பலி
கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தில் கபடி விளையாடிக் கொண்டிருந்த வீரர் விமல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. விமல் பண்ருட்டியை அடுத்த மானடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர். இவர் கபடி விளையாடிக் கொண்டிருந்த போது எதிரணியினர் பாய்ந்து வந்து பிடித்த போது உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications