என்னமோ போங்க எதுவும் விளங்கவில்லை! சட்டத் திருத்தத்துக்கு எதிர்காலமே இல்லையே! பிறகு எப்படி? -திருமா
சென்னை: தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தத்துக்கு எதிர்காலமே இல்லை என்ற நிலையில் இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டது ஏனென்று தமக்கு விளங்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், உரிய கவனம் செலுத்தப்பட்டிருந்தால், சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதையும், அதனால் எழுந்த எதிர்மறையான விமர்சனங்களையும் தமிழக அரசு தவிர்த்திருக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்ததற்காக முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான விதிகளை அறிவிக்கை செய்வதற்குமுன் அவற்றிலுள்ள தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான பகுதிகளைக் களைய வேண்டுமென இந்திய ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்பான 29 சட்டங்களையும் மாற்றி புதிய நான்கு சட்டத் தொகுப்புகளாக இந்திய ஒன்றிய பாஜக அரசு கடந்த 2020 ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்திருந்த நாட்களில் எவ்வித விவாதமும் இல்லாமல் அந்த தொகுப்புகள் நிறைவேற்றப்பட்டன. நீண்ட நெடுங்காலமாகப் போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் பல வரையறைகள் அந்தத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
இதனை திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்போதே சுட்டிக்காட்டியதோடு தத்தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தின.இந்நிலையில், அத்தொகுப்புகளுக்கான விதிகளை ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அவ்விதிகள் தமிழ்நாடு, கேரளா உட்பட பெரும்பாலான மாநிலங்களில் வரைவு விதிகளாக பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு வெளியிடப்பட்டுள்ளன. கூடிய விரைவில் இந்த விதிகளை அறிவிப்பு செய்வோம் என்றே ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
அவ்வாறு அறிவிக்கை செய்துவிட்டால் நான்கு சட்டத் தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள 29 சட்டங்களும் தாமாகவே காலாவதி ஆகிவிடும்.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டத் திருத்தத்துக்கு எதிர்காலமே இல்லை என்னும் நிலையில் இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டது ஏனென்று விளங்கவில்லை. இதில் உரிய கவனம் செலுத்தப்பட்டிருந்தால், சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதையும், அதனால் எழுந்த எதிர்மறையான விமர்சனங்களையும் தவிர்த்திருக்க முடியும்.
எனினும், இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு 2022 ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டுள்ள இந்த நான்கு சட்டத் தொகுப்புகளுக்கான வரைவு விதிகளை அறிவிக்கை செய்வதற்கு முன்பு அவற்றில் இடம் பெற்றுள்ள தொழிலாளர்கேஇன் நலன்களுக்கு எதிரான பகுதிகளை நீக்கிவிட்டு அறிவிக்குமாறு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.''
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications