2000 ரூபாய் நோட்டு தடை..பண மதிப்பிழப்பை அன்றே கணித்தாரா விஜய் ஆண்டனி?
சென்னை: பிங்க் கலரில் அச்சிடப்பட்டு மத்திய ரிசர்வ் வங்கியால் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த ரூபாய் நோட்டில் மங்கல்யான் விண்கலத்தின் படம் அச்சிடப்பட்டிருக்கும். இந்த பணத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. இந்த பணம் திரும்ப பெறப்படும் என்று அன்றே கணித்தாரா விஜய் ஆண்டனி என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் பிச்சைக்காரன் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரர் ஒருவர் 500 மற்றும் 1000 நோட்டுகளை தடை செய்தால் ஊழலை ஒழிக்க முடியும் என்று கூறுவார். மார்ச் மாத தொடக்கத்தில் பிச்சைக்காரன் படம் வெளியாகி வெற்றி பெற்றது.

அதே ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி அவர்களால் இந்தியா முழுவதும் 500 மற்றும் 1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நாள் கணக்கில் வங்கி வாசல்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வயதானவர்களும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்த இல்லத்தரசிகளும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கருப்புப் பணப் புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும். இதில் கட்டுப்பாடுகள் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டன. இந்தியாவின் மொத்த பண சுழற்சியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளே 68 சதவீதம் உள்ளன. அதன் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய். இவற்றைப் புதிய 500, 1000 ரூபாய் தாள்களாக மாற்ற வேண்டும் என்றால், அச்சிடுவதற்கே மாதக்கணக்கில் ஆகும். அதுவே 500, 2,000 ரூபாய் நோட்டுகளாக அச்சிட்டால், 50 நாட்களுக்குள் அச்சிட்டுவிடலாம் என்ற அடிப்படையில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு கொண்டு வரப்பட்டது.
புதிதாக கொண்டு வரப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து தொடர்ந்து குறைந்துகொண்டே வந்தது ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. தட்டுப்பாடு காரணமாக அவற்றை வங்கிகளில் விநியோகிப்பதைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்வதே காரணம் என்று கூறப்பட்டது. புழக்கத்தில் குறைவாக இருந்தாலும் ரூ.2000 ஆயிரம் நோட்டு மீண்டும் அச்சிடப்படாது என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்து விட்டது.

இதனால், சந்தையில் அவற்றின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.73 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023, மார்ச் 31ம் தேதி 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் இது 10.80 சதவீதமாகும். இந்தத் தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலேயே அவை வங்கிக்கு வரவில்லை என கருதப்படுகிறது. எனவே, அவற்றை வங்கிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் பிச்சைக்காரன் 2 படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் எண்ணப்படுவதை குறியீடாக காட்டுவார்கள். இதன் மூலம் 2000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்படும் என்பதை விஜய் ஆண்டனி கணித்தாரா என்று சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுவாக சூர்யா படங்களில் வரும் சம்பவங்கள்தான் நிஜ வாழ்க்கையில் நடைபெறும் போது அன்றே கணித்தாரா சூர்யா என்ற கேள்வியுடன் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவிடப்படும். இப்போது விஜய் ஆண்டனி படத்தில் வரும் காட்சிகள் போல நிஜ வாழ்க்கையிலும் சம்பவங்கள் நடைபெற்று வருவதை ஆச்சரியத்துடனே பார்க்கின்றனர். எது எப்படியோ பிங்க் கலர் பணத்திற்கும் இந்தியாவிற்கும் ராசியே இல்லை போல.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications