பதவி தராததால் சட்டசபைக்குப் போகாமல் டிமிக்கி கொடுத்த 4 காங். எம்.எல்.ஏக்கள்

நான்கு பேரும் சத்திய மூர்த்தி பவனிலேயே இருந்தனர். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. அதில் பலருக்குப் பதவி கிடைக்கவில்லை.
இதையடுத்து மீண்டும் ஒரு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் பலர் அதிருப்தி அடைந்தனர்.
எம்.எல்.ஏக்கள் விஜயதாரணி, பிரின்ஸ், ரங்கராஜன், ஜான்ஜேக்கப் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கும் நிரந்தர செயற்குழு உறுப்பினர் பதவி வழங்க கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் கட்சி மேலிடம் அவர்களுக்கு செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
இதனால் இவர்கள் அதிருப்தி அடைந்தனர். இன்று கூடிய சட்டசபைக் கூட்டத்திற்கு அவர்கள் போகாமல் சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்திருந்தனர். கட்சித் தலைவர் ஞானதேசிகனைச் சந்தித்து தங்களுக்கு நிரந்தர செயற்குழு உறுப்பினர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.












Click it and Unblock the Notifications