லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டால் முதலில் திமுகவினர் தான் சிறைக்கு செல்வார்கள் என்று விஜயகாந்த் பேசியுள்ளார்.
திருப்பூர்: அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தை நாசமாக்கி விட்டன. தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வரப்பட்டால் முதலில் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் ரோட்டில் தேமுதிக சார்பில் மே தினவிழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய விஜயகாந்த், அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நமது நாட்டில் தொழிலாளர்களை யாரும் மதிப்பதில்லை. தமிழகத்தை ஆளும் அதிமுகவாக இருந்தாலும் சரி, ஆண்ட திமுகவாக இருந்தாலும் சரி, அவை தமிழகத்தை நாசமாக்கி விட்டன.
அரவை ஆலையில் இருந்து எனது வாழ்க்கையை தொழிலாளியாகத்தான் தொடங்கினேன். இன்றும் தொழிலாளர்களுக்காகவே குரல் கொடுத்து வருகிறேன். ஊழல் செய்பவர்களை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். அவ்வாறு லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டால் முதலில் திமுகவினர் தான் சிறைக்கு செல்வார்கள். அதனால் அவர்களுக்கு தான் பாதிப்பு என்று தெரிவித்தார்.
-
TVK Vijay: 234 தொகுதிகளுக்கும் வொர்த்தான ஆள் இருக்காங்களா? வேட்பாளர் தேர்விலும் விஜய்க்கு குழப்பம்! -
பல் போன பாட்டி முதல் பல் முளைக்காத குழந்தை வரை திமுக அரசில் பாதுகாப்பு இல்லை: நடிகை விந்தியா பொளேர் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications