எம்ஜிஆரை புறக்கணிக்கும் ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட தயாரா? விஜயகாந்த் சவால்
சிவகங்கை: இரட்டை இலை சின்னம் மற்றும் எம்ஜிஆர் புகைப்படம் இல்லாமல் சேவல் சின்னத்தில் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியுமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சவால்விடுத்துள்ளார்.
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில், விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே விஷ செடிகள்தான். 'மக்களுக்காக நான்' என்று கூறும் ஜெயலலிதாவுக்கு ஏழைகளின் பசி பற்றித் தெரியுமா என்றால் தெரியாது.

அம்மா பெயர்கள்
உணவகம், குடிநீர், உப்பு என எல்லாவற்றுக்கும் அம்மா பெயர் வைத்துள்ள ஜெயலலிதா, இந்த திட்டங்களுக்கெல்லாம் எம்ஜிஆர் பெயரை வைக்க முடியுமா?, அதற்கு மனது வருமா?

சேவல் சின்னம்
இந்த அம்மா பட்டம் யார் கொடுத்தது?, நீங்களாக வைத்துக்கொண்டதுதான் அம்மா பட்டம். உங்களுடைய சின்னமான சேவல் சின்னத்தை போட்டியிடுங்க. இரட்டை இலை சின்னத்தை தூக்கிடுங்க. எம்ஜிஆர் படத்தையும் பயன்படுத்த கூடாது.

பயம்
சேவல் சின்னத்தில் நின்னா தோற்றுவிடுவோம் என்று ஜெயலலிதாவுக்கு பயம் உள்ளது. எனவே, தேர்தல் நேரத்தில் மட்டும் எம்ஜிஆர் படம் தேவைப்படுகிறது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

பழைய கதை
எம்ஜிஆர் மறைவையடுத்து, 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. எனவே ஜெயலலிதா சேவல் சின்னத்திலும், எம்ஜிஆர் மனைவி ஜானகி, இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டனர். அதில் ஜெயலலிதா தரப்பு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications