நிர்வாக சீர்கேடும் ஊழலும் தான் போக்குவரத்து துறையில் இன்றைய நிலைக்கு காரணம்: விஜயகாந்த்
நிர்வாக சீர்கேடும் ஊழலும் தான் போக்குவரத்து துறையின் இன்றைய நிலைக்கு காரணம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: நிர்வாக சீர்கேடும் ஊழலும் தான் போக்குவரத்து துறையின் இன்றைய நிலைக்கு காரணம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாதது கண்டிக்கத் தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓய்வூதிய பலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அரசுப்பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்துத்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு தமிழக அரசே காரணம் எனக்கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை விடுத்துள்ளார். அதில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாதது கண்டிக்கத் தக்கது என கூறியுள்ளார்.
அதிமுக அரசை கண்டித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் நிர்வாக சீர்கேடும் ஊழலும் தான் போக்குவரத்து துறையில் இன்றைய நிலைக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் பாக்கித் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications