சகாயம் உயிருக்கு ஆபத்து... பாதுகாப்பு கொடுங்க…: விஜயகாந்த்
சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் உள்ளிட்ட நேர்மையான அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே அவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
சமீபகாலமாக இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்திலும் நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்ய தூண்டபடுவதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் வேளாண்துறை அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி அறிவொளியின் மரணத்தில் மர்மம்.
இதோடு கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியின் தற்கொலை போன்றவை அவர்கள் தங்களது பணியில் நேர்மையை பணியாற்ற விடாமல் பணத்தின் மீது கொண்ட பேராசையால் குறுக்கு வழியில் செல்வம் சேர்த்திட விரும்பும் கொள்ளை கும்பலோடு ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கிற அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம் என்று பொது மக்களும், பத்திரிகைளும் நம்புகிறார்கள். இதில் உண்மை இல்லாமல் இல்லை.
பணத்தின் மீதுள்ள பேராசையால் சில அரசியல்வாதிகள் குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதும், அதன் பலனாக பத்தாண்டுகள் பதினெட்டு ஆண்டுகள் என நீதிமன்றத்தின் நெடும்படி ஏறி செய்த குற்றத்துக்கு தண்டனை பெற்றிருக்கிறார்கள்.
சிலர் ஆட்சி அதிகாரத்தை இழந்திருக்கிறார்கள், இன்னும் சிலபேர் வாழ்நாள் முழுவதும் அரசியலை விட்டே ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள். இருந்தும் இதுபோன்ற அக்கிரமங்களில் ஈடுபடுகிறவர்களை இந்த அரசாங்கம் சட்டத்தின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காததது ஏன்?.
வந்த பின்பு அழுவதைவிட வரும்முன் காப்பது தான் புத்திசாலித்தனம். மீறி அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமேயானால் அதற்கு இந்த கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்களும் இந்த அரசாங்கமும் தான்பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
தற்போது, தமிழத்தில் நடைபெற்ற கனிமவள கொள்ளையை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்களை உயர்நீதி மன்றம் நியமித்துள்ளது. அவருக்கும் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்த வண்ணம் உள்ளன.
இதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. அவருக்கு மட்டுமல்ல இது போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு தேமுதிக என்றும் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருக்கும் என்று தெரிவித்து கொள்வதோடு, தமிழக அரசாங்கம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications