”கலாமின் உடல் சொந்த ஊரிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும்”- தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஷில்லாங்கில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிசடங்கு தமிழகத்திலேயே நடத்தப்பட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் மறைவிற்கு விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை.

அண்ணாரது இழப்பு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பாகும். அவரது இறுதிசடங்கு தமிழகத்திலேயே நடத்தவேண்டும்.
இதனை தமிழக மக்களின் சார்பாக மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications