ஹிட்லர் ஆட்சி நடக்கிறது.. ஏன் இவ்வளவு பிடிவாதம்.. விஜயகாந்த் சாடல்
சேலம்: தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்துவதில் தமிழக அரசு ஏன் இவ்வளவு பிடிவாதம் காட்டுகிறது என்று தெரியவில்லை. இது ஹிட்லர் ஆட்சி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மது விலக்கு கோரி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்தி பரிதாபமாக மரணத்தைச் சந்தித் சசிபெருமாள் குடும்பத்தினரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சசி பெருமாள் சொன்னதை கேட்டு உடனே மதுவிலக்கு செய்தால் அவருக்கு பெயர் கிடைத்துவிடும் என்று நினைக்கிறது அரசு. மதுவிலக்கு விசயத்தில் அரசு பிடிவாதமாக இருக்கிறது.
கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த ஆட்சியில் மக்களுக்கு காவல் இல்லை. எனக்கே போலீஸ் காவல் தர மறுக்கிறது. மற்ற மக்களின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்.
ஜெயலலிதாவின் ஆட்சி ஹிட்லர் ஆட்சி என்று மக்கள் சொல்கிறார்கள். இந்த அம்மாவை ஹிட்லர் என்று மக்கள் சொல்வதுண்டு.
தமிழ்நாட்டில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றன. ஆனால் அதிமுக அரசு அதற்கு செவிசாய்க்க மறுத்ததன் விளைவு, காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் உயிரிழப்பாகும்.
தமிழக தாய்மார்களின் கண்ணீரை துடைக்கவும், இளைஞர்களை காக்கவும், மதுவின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், பூரணமதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, வருகின்ற 04.08.2015 அன்று தமிழகத்தில் நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு ஆதரவை அளிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றகோரிய பொதுமக்களின் போராட்டத்தில், காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, தடியடி நடத்தியதோடு மட்டுமல்லாமல், கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, கலவரபூமியாக மாற்றியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கக்கூடிய செயலாகும். அரசியல் கட்சிகள் அகிம்சை முறையில் நடத்தும் போராட்டத்தைக் கூட வன்முறைக்களமாக மாற்றும் அதிமுக அரசின் போக்கு, தமிழகத்தில் பல்வேறு பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை எச்சரிக்கை செய்கின்றேன்.
உடனடியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications