கருப்பு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கியோருக்கு மோடியின் அறிவிப்பு பேரிடி: விஜயகாந்த்
ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பை விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
சென்னை: கருப்பு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கியோருக்கு ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு பேரிடியாகத்தான் இருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் கூறியுள்ளதாவது:
நள்ளிரவு முதல் ரூ. 500 மற்றும் ரூ. 1000 செல்லாது என்று மோடி அறிவித்தது மிகவும் வரவேற்கத்தக்கது.

இந்த நடவடிக்கை லஞ்சம், ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்க மிகப்பெரிய உதவி செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இந்த நடவடிக்கையை நான் மனதார வரவேற்கிறேன்.
சாமான்ய மக்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் லஞ்சம், ஊழல், மற்றும் கருப்பு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருப்பவா்களுக்கு, இந்த அறிவிப்பு போிடியாக இருக்கும்.
தொலைநோக்குப் பாா்வையில் மோடி அவா்களின் இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கே ஒரு வரப்பிரசாதமாக இருக்கும், மேலும் நம் நாட்டை வல்லரசாக மாற்ற இந்த அறிவிப்பு பெரும் உதவி செய்யும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications