ஏன் தோற்றோம்?.. கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இன்று முதல் 2வது கட்ட ஆலோசனை!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சியின் உள்ளாட்சி நிர்வாகிகளுடன் இன்று முதல் 20ம் தேதி வரை ஆலோசனை நடத்துகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, தமாகவுடன் கடைசி நேரத்தில் கூட்டணி வைத்து 104 தொகுதிகளில் போட்டியிட்டு 104 தொகுதிகளிலும் படு தோல்வியைத் தழுவியது தேமுதிக. இதில் விஜயகாந்த்துக்கே டெபாசிட் பறிபோய் பெரும் கேவலமான நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து கடந்த மே 23ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த். அப்போது கூட்டணி சரியாக அமையாமல் போனதால்தான் தோற்றோம் என்று பெரும்பாலானவர்கள் கூறினர். திமுக கூட்டணியில் நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் பலரும் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் முதல் முறையாக சமீபத்தில் வெளியே வந்த விஜயகாந்த் தனது மனைவியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில் பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவேன் என்றும் விஜயகாந்த் கூறினார். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஆலோசனையில் விஜயகாந்த் இறங்கியுள்ளார்.
இன்று முதல் 20ம் தேதி வரை கட்சியின் உள்ளாட்சி அளவிலான அதாவத ஊராட்சி, ஒன்றிய, பகுதி, வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்திலும் நாம் ஏன் தோற்றோம், என்ன செய்திருக்க வேண்டும், என்ன செய்யத் தவறினோம் என்பது உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்கிறார் விஜயகாந்த். கூட்டத்திற்குப் பின்னர் அவர் தனது அடுத்த கட்ட உத்திகள் குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த உத்திகளையும், திட்டங்களையும் அவர் அறிவிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கடலூரில் நடந்தது என்ன.. திருமாவளவனிடம் மனம் விட்டு பேசிய பிரேமலதா.. பரபரப்பு பின்னணி -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications