தோழர்களே திரண்டு வாருங்கள்.. தேர்தல் சிறப்பு மாநாட்டுக்கு விஜயகாந்த் அழைப்பு!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி தேமுதிக - மநகூ சார்பில் நடத்தப்படும் தேர்தல் சிறப்பு மாநாட்டிற்கு தொண்டர்கள் அனைவருக்கும் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "தமிழக அரசியலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்க அமைந்திருக்கும் நமது வெற்றிக் கூட்டணியான தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் வருகின்ற 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

அதில் நானும், நமது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக, ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் சி.பி.ஐ(எம்), தொல்.திருமாவளவன், தலைவர் வி.சி.க, இரா.முத்தரசன் மாநில செயலாளர் சி.பி.ஐ, ஆகியோர் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்ற இருக்கிறோம்.
அச்சமயம் நமது தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் அனைத்து கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் தாங்கள், தங்கள் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் நாட்டு நலனில் அக்கறைகொண்ட நல்லவர்களோடும் அணிதிரண்டு வந்து, இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடந்திடும் வகையில் அலைகடலென திரண்டு ஆர்ப்பரித்து வாரீர்! உங்கள் அனைவரையும் மாநாட்டில் சந்திக்க ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications