26ம் தேதி முதல் 'உங்களுடன் நான்'.. கட்சியினருடன் பேசப் போகிறார் விஜயகாந்த்!
சென்னை: உங்களுடன் நான் என்ற பெயரில் ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சிக்கு தேமுதிக ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி ஜூன் 26ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சி நிர்வாகிகள், கட்சியினரை நேரில் சந்தித்துப் பேசி ஆலோசனை நடத்தப் போகிறார் விஜயகாந்த்.
இதுதொடர்பான அறிவிப்பை தேமுதிக மேலிடம் வெளியிட்டுள்ளது.

அட்டையோடு வாங்க
இந்தக் கூட்டத்திற்கு வரும் பொழுது கண்டிப்பாக தலைமை கழகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் அடையாள அட்டையையும், தங்களுடைய மாவட்ட கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட அனுமதி அட்டையையும் கொண்டு வர வேண்டும். மேற்படி, அட்டைகளுடன் வருபவர்கள் மட்டுமே கட்டாயம் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

26ம் தேதி கோவை
வரும் 26ஆம் தேதி கோவை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளும், 27ஆம் தேதி திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளும், 28ஆம் தேதி கரூர் மாவட்ட நிர்வாகிகளும், 29ஆம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளும்,

30ம் தேதி சேலம்
30ஆம் தேதி சேலம் மாநகர், கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜூலை 1ம் தேதி தர்மபுரி
ஜூலை 1ஆம் தேதி தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளும், 2ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளும், 3ஆம் தேதி வேலூர் மத்தியம், கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளும்,

4ம் தேதி திருவண்ணாமலை
4ஆம் தேதி திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications