ஜெ. படம் கிழிப்பு விவகாரம்: கைதிலிருந்து தப்பினார் விஜயகாந்த்! ஜன. 5 வரை கைது செய்ய இடைக்கால தடை!!
மதுரை: தஞ்சாவூரில் பேருந்து நிழற்குடையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழித்தெறிய உத்தரவிட்ட விவகாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஜனவரி 5-ந் தேதி வரை கைது செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ஜனவரி 5-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சாவூரில் நேற்று டெல்டா விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் பேசிக் கொண்டிருந்த மேடைக்கு எதிரே பேருந்து நிழற்குடையில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்து ஆத்திரப்பட்ட விஜயகாந்த் அதனைக் கிழிக்குமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டார். தேமுதிகவினரும் உடனே ஜெயலலிதா படத்தை கிழித்தனர்.
இதனால் கொந்தளித்துப் போன அதிமுகவினர் விஜயகாந்த் கொடும்பாவியை எரித்தனர். இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ. ரெங்கசாமி, தஞ்சை மாநகராட்சி ஆணையர் குமார் ஆகியோர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது "பொதுச்சொத்துக்கு" சேதம் விளைவித்ததாக தஞ்சாவூர் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் 13 தேமுதிகவினரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதால் அதிமுகவினர் விஜயகாந்த் கொடும்பாவி எரிக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
சட்டம் தன் கடமையை செய்யும் என முதல்வர் கூறியிருப்பதால் எங்கே தாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவோமோ என அஞ்சி உடனேயே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அவசரம் அவசரமாக முன் ஜாமீன் மனு ஒன்றை விஜயகாந்த் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மனு மீது ஜனவரி 5-ந் தேதிக்குள் பதிலளிக்க தஞ்சை கிழக்கு காவல்நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. மேலும் ஜனவரி 5-ந் தேதி வரை விஜயகாந்த்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்தும் நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.
இதனால் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார் விஜயகாந்த்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications