ஜெ. படம் கிழிப்பு விவகாரம்: கைதிலிருந்து தப்பினார் விஜயகாந்த்! ஜன. 5 வரை கைது செய்ய இடைக்கால தடை!!
மதுரை: தஞ்சாவூரில் பேருந்து நிழற்குடையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழித்தெறிய உத்தரவிட்ட விவகாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஜனவரி 5-ந் தேதி வரை கைது செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ஜனவரி 5-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சாவூரில் நேற்று டெல்டா விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் பேசிக் கொண்டிருந்த மேடைக்கு எதிரே பேருந்து நிழற்குடையில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்து ஆத்திரப்பட்ட விஜயகாந்த் அதனைக் கிழிக்குமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டார். தேமுதிகவினரும் உடனே ஜெயலலிதா படத்தை கிழித்தனர்.
இதனால் கொந்தளித்துப் போன அதிமுகவினர் விஜயகாந்த் கொடும்பாவியை எரித்தனர். இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ. ரெங்கசாமி, தஞ்சை மாநகராட்சி ஆணையர் குமார் ஆகியோர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது "பொதுச்சொத்துக்கு" சேதம் விளைவித்ததாக தஞ்சாவூர் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் 13 தேமுதிகவினரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதால் அதிமுகவினர் விஜயகாந்த் கொடும்பாவி எரிக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
சட்டம் தன் கடமையை செய்யும் என முதல்வர் கூறியிருப்பதால் எங்கே தாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவோமோ என அஞ்சி உடனேயே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அவசரம் அவசரமாக முன் ஜாமீன் மனு ஒன்றை விஜயகாந்த் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மனு மீது ஜனவரி 5-ந் தேதிக்குள் பதிலளிக்க தஞ்சை கிழக்கு காவல்நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. மேலும் ஜனவரி 5-ந் தேதி வரை விஜயகாந்த்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்தும் நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.
இதனால் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார் விஜயகாந்த்.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications