Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. படம் கிழிப்பு விவகாரம்: கைதிலிருந்து தப்பினார் விஜயகாந்த்! ஜன. 5 வரை கைது செய்ய இடைக்கால தடை!!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தஞ்சாவூரில் பேருந்து நிழற்குடையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழித்தெறிய உத்தரவிட்ட விவகாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஜனவரி 5-ந் தேதி வரை கைது செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ஜனவரி 5-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தஞ்சாவூரில் நேற்று டெல்டா விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தார்.

Vijayakanth moves HC bench for anticipatory bail

அவர் பேசிக் கொண்டிருந்த மேடைக்கு எதிரே பேருந்து நிழற்குடையில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்து ஆத்திரப்பட்ட விஜயகாந்த் அதனைக் கிழிக்குமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டார். தேமுதிகவினரும் உடனே ஜெயலலிதா படத்தை கிழித்தனர்.

இதனால் கொந்தளித்துப் போன அதிமுகவினர் விஜயகாந்த் கொடும்பாவியை எரித்தனர். இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ. ரெங்கசாமி, தஞ்சை மாநகராட்சி ஆணையர் குமார் ஆகியோர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது "பொதுச்சொத்துக்கு" சேதம் விளைவித்ததாக தஞ்சாவூர் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் 13 தேமுதிகவினரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதால் அதிமுகவினர் விஜயகாந்த் கொடும்பாவி எரிக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.

சட்டம் தன் கடமையை செய்யும் என முதல்வர் கூறியிருப்பதால் எங்கே தாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவோமோ என அஞ்சி உடனேயே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அவசரம் அவசரமாக முன் ஜாமீன் மனு ஒன்றை விஜயகாந்த் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மனு மீது ஜனவரி 5-ந் தேதிக்குள் பதிலளிக்க தஞ்சை கிழக்கு காவல்நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. மேலும் ஜனவரி 5-ந் தேதி வரை விஜயகாந்த்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்தும் நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.

இதனால் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார் விஜயகாந்த்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+