தேமுதிக பொருளாளரின் பேக்கரிக் கடையை திறந்து வைத்த விஜயகாந்த்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னையில் ஒரு பேக்கரிக் கடையைத் திறந்து வைத்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் வந்திருந்தார்.
தேமுதிக பொருளாளர் என்.ஆர். இளங்கோவன் ஒரு பேக்கரிக் கடையைத் திறந்துள்ளார். நெற்குன்றத்தில் திறக்கப்பட்டுள்ள இந்தக் கடையின் பெயர் ஆரோக்கியா பேக்கரி. இந்தக் கடையை தனது கரத்தால் திறந்து வைக்க வேண்டும் என்று விஜயகாந்த்துக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று இன்று கடையைத் திறந்து வைத்தார் விஜயகாந்த்.

மனைவி பிரேமலதாவுடன் கடைக்கு வந்த விஜயகாந்த் ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். அவரும், பிரேமலதாவுக்கும் இளங்கோவன் குடும்பத்தினர் ரோஜாப் பூ மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.
பின்னர் கடையில் இனிப்பு வாங்கினார் விஜயகாந்த். காசு கொடுத்து வாங்கி முதல் வியாபாரத்தை அவர் தொடங்க வைத்தார். அவர் வாங்கியது சூஸ்பரி என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அதே நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. அதில் கலந்து கொண்டு ஹெல்மெட், தையல் மெஷின், இஸ்திரி பெட்டிகள் ஆகியவற்றை ஏழை எளியோருக்கு விஜயகாந்த் வழங்கினார்.












Click it and Unblock the Notifications