அந்த மாடுகளைப் பூராம் டென்மார்க்குக்கே பத்தி விடுங்க.. விஜயகாந்த் ஆவேசம்
டென்மார்க் நாட்டிலிருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்ஸி பசுக்களை அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: டென்மார்க்கிலிருந்து ஜெர்ஸி ரக பசு மாடுகள் சென்னைக்கு இறக்குமதியாகிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவற்றை டென்மார்க் நாட்டுக்கே அனுப்பி விட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வாட்ஸ் ஆப்பில் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதைத்தான் தற்போது விஜயகாந்த்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு கண்டித்துள்ளார்.
இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளதாகவுநம் விஜயகாந்த் காட்டமாக கூறியுள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெர்ஸி மாடுகள்
சென்னை விமான நிலையத்தில் டென்மார்க்கில் இருந்து ஜெர்சி வகையான மாடுகள் இறக்குமதி செய்து இருக்கின்றன என்கிற செய்தி வாட்ஸாப் மூலம் பரவலாக பரவிக்கொண்டு இருக்கிறது.

வியாதி வரும்
இந்த மாடுகள் தரும் பால் மக்கள் அருந்தினால் மிக கொடுமையான வியாதிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜல்லிக்கட்டு போராட்டம்
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் மூன்று நாட்களாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள், இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இன்னும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் டென்மார்க்கில் இருந்து மாடுகள் இறக்குமதி செய்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயலாகும்.

டென்மார்க்குக்கு அனுப்பிருங்க
ஆகவே இறக்குமதி செய்த மாடுகளை இந்த அரசு கண்டறிந்து அந்த மாடுகளை டென்மார்க் நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும். நம்நாட்டில் நாட்டு மாடுகளை பராமரிக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் என கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications