அந்த மாடுகளைப் பூராம் டென்மார்க்குக்கே பத்தி விடுங்க.. விஜயகாந்த் ஆவேசம்
டென்மார்க் நாட்டிலிருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்ஸி பசுக்களை அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: டென்மார்க்கிலிருந்து ஜெர்ஸி ரக பசு மாடுகள் சென்னைக்கு இறக்குமதியாகிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவற்றை டென்மார்க் நாட்டுக்கே அனுப்பி விட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வாட்ஸ் ஆப்பில் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதைத்தான் தற்போது விஜயகாந்த்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு கண்டித்துள்ளார்.
இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளதாகவுநம் விஜயகாந்த் காட்டமாக கூறியுள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெர்ஸி மாடுகள்
சென்னை விமான நிலையத்தில் டென்மார்க்கில் இருந்து ஜெர்சி வகையான மாடுகள் இறக்குமதி செய்து இருக்கின்றன என்கிற செய்தி வாட்ஸாப் மூலம் பரவலாக பரவிக்கொண்டு இருக்கிறது.

வியாதி வரும்
இந்த மாடுகள் தரும் பால் மக்கள் அருந்தினால் மிக கொடுமையான வியாதிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜல்லிக்கட்டு போராட்டம்
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் மூன்று நாட்களாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள், இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இன்னும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் டென்மார்க்கில் இருந்து மாடுகள் இறக்குமதி செய்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயலாகும்.

டென்மார்க்குக்கு அனுப்பிருங்க
ஆகவே இறக்குமதி செய்த மாடுகளை இந்த அரசு கண்டறிந்து அந்த மாடுகளை டென்மார்க் நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும். நம்நாட்டில் நாட்டு மாடுகளை பராமரிக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் என கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications