பஞ்சபாண்டவர்கள் ஆறுமுகமானபின் நெட்டிசன்களிடம் படும்பாட்டை பாருங்களேன்
சென்னை: நால்வராய் இருந்த மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர், தேமுதிகவின் விஜயகாந்துடன் இணைந்த பின்னர் பஞ்ச பாண்டவர்கள் என்று அறிவித்தனர். இப்போது தமாகாவின் ஜி.கே.வாசனுடன் இணைந்து ஆறுமுகக்கூட்டணியாக மாறியுள்ளனர்.
இந்த தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அணி என்றால் அது மநகூ - தேமுதிக - தமாகா கூட்டணிதான், கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இதில் பிரேமலதாதான் ஹைலைட்.
விஜயகாந்த், பிரேமலதாவை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டிய அல்வாவை கொஞ்சம் ருசித்து பாருங்கள். இது ரசித்து சிரிக்க மட்டுமே.
|
ஆறுமுகக் கூட்டணி
விஜயகாந்த் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும், ஆறுமுகக்கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் என்று கூறி வருகிறார் இதற்காகவே இந்த கமெண்ட்.
|
முருகனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா போட்டதோடு கூட்டணிக்கும் அரோகரா போட்ட நெட்டிசன்.
|
வைகோவிற்காக இந்த பதிவு
வண்டு முருகனின் படத்தைப் போட்டு வைகோவிற்காக போட்ட மீம்ஸ் இது.
|
எப்ப யாரு விடுவாங்களோ
சில பதிவுகளுக்கு கமெண்ட் தேவையில்லை. மக்கள் நலக்கூட்டணி + தேமுதிகவிற்காக போட்ட பதிவு இது
|
மொழி பெயர்ப்புக்கு உதவுமே
விஜயகாந்த் பேச்சை மொழி பெயர்க்க ஒருத்தர் வேண்டுமே என்பதற்காக போட்ட பதிவு இது.