முந்திரிப் பருப்புத் "திருடனை" கட்சியை விட்டு தூக்கிய விஜயகாந்த்
சென்னை: முந்திரி, இரும்பு, அலுமினியம் என திருடியே கோடீஸ்வரர் ஆன தனது கட்சிக்காரர் முருகன் என்பவரை கட்சியை விட்டுத் தூக்கியுள்ளார் விஜயகாந்த்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் முருகன். பிழைப்பு தேடி சென்னை சென்றவர் அங்கு செங்குன்றம் அருகே குடியேறினார். ஆரம்பத்தில் பழைய இரும்புக் கடை வியாபாரத்தைத் தொடங்கிய இவர் போதிய வருமானம் இல்லாததால் பழைய இரும்பு வியாபாரத்தை உபரி தொழிலாக மாற்றி விட்டு திருட்டை முதல் தொழிலாக மாற்றினார்.

தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றிச்செல்லப்படும் இரும்பு, அலுமினியம் போன்றவைகளை ஏற்றிச்செல்லும் லாரி உரிமையாளர், டிரைவர் ஆகியோரை கைக்குள் போட்டுக்கொண்டு இரவு நேரங்களில் தனது கடைக்கு கொண்டுவந்து அவற்றை திருடி விற்று அசுர வேகத்தில் பணம் சம்பாதிக்க தொடங்கினார்.
தனது பணபலத்தால் தேமுதிகவில் புழல் ஒன்றிய செயலாளராக ஆனார். தற்போது முந்திரிப் பருப்புத் திருட்டில் சிக்கி தலைமறைவாகியுள்ளார். களவாணிப் பயலை கட்சியில் சேர்த்துள்ளதை அறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது முருகனை கட்சியை விட்டு டிஸ்மிஸ் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications