குழப்பம் ஏற்படுத்தலாம், கவனம்.. தொண்டர்களுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் குழப்பததை ஏற்படுத்த திமுகவினரும், அதிமுகவினரும் முயற்சிக்கலாம். கவனமாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தேமுதிகவினருக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துளளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணியை வெற்றி பெற வைக்கும் நோக்கத்துடன் நான் தேர்தல் பணியாற்றி வருகிறேன். அதேபோல் தொண்டர்களும் அவரவர் தொகுதியில் கடுமையாக களப்பணியாற்ற வேண்டும.
அதிமுகவும், திமுகவும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் தேமுதிக தொண்டர்கள் இடம் கொடுக்காமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications