மணல் கொள்ளை: மன்மோகன் சிங், ராகுல்காந்தி, சோனியாவுக்கு விஜயகாந்த் கடிதம்
Subscribe to Oneindia Tamil

இதே கடிதத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கும் விஜயகாந்த் அனுப்பியுள்ளார்.
தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவை அக்டோபர் 6ஆம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்தார். அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் உள்பட தேமுதிகவின் சட்டப் பேரவை உறுப்பினர்களும் உடன் சென்றிருந்தனர்.
அப்போது தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தார்.
இந்த மனுவையும் பிரதமருக்கு எழுதப்பட்ட தன் கடிதத்தோடு இணைத்து மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜயகாந்த் கடிதம் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications