கோவில் உண்டியலை திருட முயன்ற நபரை அடித்தேக் கொன்ற கிராம மக்கள்!
ஈரோடு அருகே கோவில் உண்டியலை திருட முயன்ற நபரை கிராம மக்களே அடித்துக் கொன்றுள்ளனர். இதுதொடர்பாக 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு: கவுந்தப்பாடியை அருகே உள்ள கோவில் ஒன்றில் திருட முயன்ற நபரை விரட்டிப் பிடித்த கிராம மக்கள் அவரை அடித்தே கொன்றுள்ளனர். இதுதொடர்பாக கிராம மக்கள் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த வளையக்காரன் பாளையத்தில் உள்ள அண்ணமார் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்துள்ளனர்.

உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கோவிலுக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது 2 பேர் உண்டியலை உடைப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர்.
கூட்டம் திரளவே அச்சமடைந்த கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை விரட்டிச் சென்ற கிராம மக்கள் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அங்கு கட்டி வைத்து அந்த நபரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் மயக்கமடைந்த அந்த நபரை சிலர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கொல்லப்பட்ட நபர் ஈரோட்டை அடுத்த ஆர்என்.புதூரை அடுத்த சிஎம்.நகரை சேர்ந்த 46 வயதான பழனிச்சாமி என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வளையக்காரன் பாளையத்தை சேர்ந்த 30 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் தப்பியோடிய மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். கோவில் உண்டியலை திருட முயன்ற நபரை கிராம மக்களே அடித்துக் கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications