ஓ.பி.எஸ் அணி ரிட்டர்ன் ஆனதால்... கூவத்தூரில் வன்முறை தவிர்ப்பு!
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பாதியிலேயே திரும்பி விட்டதால் கூவத்தூரில் வன்முறை வெடிப்பது தவிர்க்கப்பட்டது.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கூவத்தூர் செல்லும் முயற்சி பாதியிலேயே தடுக்கப்பட்டு விட்டதால், அங்கு வன்முறை வெடிப்பது தவிர்க்கப்பட்டது.
அதிமுக உடைந்து விட்ட நிலையில் தற்போது சசிகலாவும் சிறைக்குப் போகவுள்ளார். இந்தப் புதிய சூழலில் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்மையில் யார் பக்கம் உள்ளனர் என்பது தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை புதிய சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஆனால் உண்மையில் அங்குள்ள எம்.எல்.ஏக்கள் யார் பக்கம் உள்ளனர் என்பது தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் கிளம்பினர். இதனால் கூவத்தூரில் பெரும் மோதல் வெடிக்குமா என்ற அச்ச நிலை ஏற்பட்டது. ஏற்கனவே அங்குள்ள பல எம்.எல்.ஏக்கள் தங்களை வந்து முதல்வர் மீட்க வேண்டும் என்றுகூறி அவருக்கு தகவல் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. முதல்வரும் கூட அதைக் கூறியிருந்தார்.
எனவே இவர்கள் அங்கு சென்றால் நிச்சயம் அவரது ஆதரவாளர்களுக்கும், சசிகலா தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என அஞ்சப்பட்டது. போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கோவளத்தோடு நிறுத்தப்பட்டு விட்டதால் பிரச்சினை தவிர்க்கப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications