விஷால் தம்பியும், தீபாவும் இன்னும் அரசியலில் பாலபாடம் கற்கவில்லையே.. எச்.ராஜா நக்கல்
விஷாலும், தீபாவும் அரசியலில் இன்னும் பாலபாடம் கற்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால், தீபாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து எச்.ராஜா கூறுகையில் அவர்கள் இருவரும் இன்னும் பாலபாடம் கற்கவில்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகியன கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நாள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது. நேற்று அந்த வேட்புமனுக்கள் மீது அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.
இதில் படிவம் 26-ஐ நிரப்பாத காரணத்தால் தீபாவின் வேட்புமனுவும், முன்மொழிந்தவர்கள் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன.
விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு. அரசியலில் இன்னும் பாலபாடம் கற்கவில்லை என்று தெரிகிறது
— H Raja (@HRajaBJP) December 5, 2017
இதற்காக விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டங்களை செய்தார். பின்னர் அவரது மனு ஏற்கப்பட்டு மீண்டும் நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில் விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு. அரசியலில் இன்னும் பாலபாடம் கற்கவில்லை என்று தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications