ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் முதல் வெற்றி.. விஷால் பரபரப்பு அறிக்கை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வேலுச்சாமி தூக்கி அடிக்கப்பட்டதற்கு இதான் காரணமாமே.?!- வீடியோ
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு, நடிகர் விஷால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஷால் வெளியிட்ட அறிக்கை:

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எனது மனு பரிசீலனையின்போது எழுந்த சர்ச்சைகளை அடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதை ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருதுகிறேன்.
நான் தேர்தலில் நிற்கிரேனா இல்லையோ, இதன் மூலம் இனியாவது ஆர்கே நகரில் நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் நானும் ஆர்கே நகர் மக்களும் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு விஷால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications